துள்ளி துள்ளி விழும்
வெள்ளி மலையருவியின்
செல்ல மகள் நான்
என் காதலன் கடல் நாயகனை
சேர காடு மலை கடந்து
நாடு புறங்களில் ஓடி
பாடி ஆடும்
பருவ மங்கை நான்
என் இரு புறமும்
செடி கொடிகளும்
பூக்கும் மரங்களும்
வழித்துணையாய் என்னோடு
கதைகள் பேசி
கருத்துகள் பரிமாறி
நடகின்றன ....
காதலனை காணப்போகும்
துடிப்பின் வேகம் குறைக்காது
எனக்குள்ளே ...
கொஞ்சிகுலவும் மீன்கள் கூட்டம்
ஓரமாய் எட்டிப்பார்க்கும்
மீன்கொத்தி கூட்டம்
என் சலசலப்பின் சத்தத்தில்
கவி பாடும் ...
பறவைகள் கூட்டம்
என் வழிகளில் ....
வண்ண பூக்களின் கூட்டம்
இந்த இயற்கையின் ...
அழகை படைத்த
இறைவனை வணங்கி கொண்டே
என்னவனை போய் சங்கமித்திடுவேன்
~ அன்புடன் யசோதா காந்த் ~
அழகாய் இருக்குங்க அக்கா