காதல் (?)




ஒருவரை ஒருவர் சந்தித்தோம்
கண்களால் பரிமாறி கொண்டோம்
வணக்கம் சொல்லி ஆரம்பித்தோம்
ஏதேதோ உரையாடினோம்
சில நிமிடங்கள் பேச நினைத்தோம்
பல கணங்களாய் தொடர்ந்தோம்
நாளை பேசி கொள்ளலாமே
என நினைத்த போதோ
மனமின்றி  விடைபெற்றோம்
என்ன பேசினோம் ? எதை பற்றி பேசினோம் ?
விடை தெரியவில்லை
மனதில் மற்றும் ஒரு கேள்வி
இது என்ன ?   காதல் ?.........

~ அன்புடன் யசோதா காந்த் ~

0 Responses

எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..