8/11/2011 10:34:00 AM
|
by யசோதா காந்த்
கல்லாதவனையும்
கவிதை
சொல்ல சொல்லி மேதையாக்கும்..
கருணை இல்லாதவனையும்
கனிவாய் பேசவைக்கும்
இல்லாத ஒன்றை
இருப்பதாக காட்டும்
கண்களிலே கனவுகளையும்
நெஞ்சினிலே எதிர்பார்ப்புகளையும்
வைத்துகொண்டு
கண்மூடித்தனமாய் பறக்கவைக்கும்
புது உணர்வுக்கு பெயர்தான் காதலோ .........
~ அன்புடன் யசோதா ~
எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..
நன்றிகளோடு
யசோதா காந்த் ..