வீடு தெருவோர குப்பைகளையும்
மீந்துபோன கழிவுகளையும்
நாற்றம் வீசும் அசுத்தங்களையும்
தேவை இல்லா பண்டங்களையும்
எனக்குள் வாங்கி கொள்கிறேன்
மகிழ்ச்சியாய் ,,,
நீங்கள் சுத்தமாகும் போது
நானோ அழுக்காய்
ஆனந்தமாய் ,,,
குப்பையிடும் குப்பை தொட்டில் என்னில்
குழந்தைகளையும் வீசும்
படுபாவிகள்தான் யார் யாரோ ..??
சஞ்சலமில்லா சண்டாளர்களே
கத்தி கதறும் குழந்தையுடன் சேர்ந்து
உயிரற்ற நானும் அழுகின்றேனே ...
இதை கேட்பாரில்லையோ ,,...
இவைகளுக்கு தீர்வு காண்பாரில்லையோ...
கருவாய் கலைக்காமல்
உருவாய் தந்து ...என்னுள் தொலைக்கும்
கருணையற்ற உருவே ...
இனியும் வேண்டாம் இதுபோல் கொடூரம்
................ஆதங்கத்துடன் குப்பை தொட்டி
~அன்புடன் யசோதா காந்த் ~
எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..
நன்றிகளோடு
யசோதா காந்த் ..