பொறாமை...



பொறாமை நான் அறியாத ஓன்று
என்னவனே நீ என்னில் ஆனபோதோ
பொறாமையின் மொத்த உருவமாய் நானும்
நீ குளித்தபின்
உன் உடலில் ஒட்டியிருக்கும்
நீர்துளி மேல்...
நீ உடுத்திக்கொள்ளும்
உன் ஆடைகள் மேல்…
உன் உதட்டோரம் ஒட்டியிருக்கும்
தேனீர் கோப்பை மேல்…
நாள்தோறும்
உன் காலை ஒட்டிக்கொண்டிருக்கும்
காலணிகள் மேல்…
நீ கொஞ்சி சிரிக்கும்
எதிர்வீட்டு குழந்தை மேல்...
உன்முகத்தை ஒளியினால்
மிளிர செய்யும் அந்த சூரியன் மேல்...
உன்னை தழுவிச் செல்லும்
தென்றல் காற்றின் மேல்...
உன் கைகள் குலுக்கி
வாழ்த்தும்சொல்லும்  கரங்கள்மேல்..
எங்கும் எதிலும்
எனக்கு பொறாமை மட்டுமே
என் உயிர் காதலா!
~ அன்புடன் யசோதா காந்த் ~

0 Responses

எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..