என்னவனே ...




அழகிய பூவாய் நான்
எனக்குள் நீ இருப்பதால்
நானும் மிக அழகாய்
இதமான இசை நீ
புல் வெளியாய் நீ
பனித்துளியாய் நான்
பல ராகங்களை
கேட்கிறேன் நீ பேசும்போது
பனிக்கட்டியின் குளிர்ச்சியாய்
நீ என்னை பார்க்கும் போது
காற்றினில்  மிதக்கிறேன்
உன் கை பிடித்து நடக்கும்போது
உன்னால் காதல் சுகமானது .....
~ அன்புடன் யசோதா~

0 Responses

எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..