யார் இவனோ...



மின்னும் என் கண்களில்
மின்னலாய் வந்தவனே
மின்சாரமாய் பாய்ந்து
மின் மினி  பூச்சியாய்
என்னை மின்ன செய்தவனே
கண் இமைக்கும் நேரத்தில்
என்னுள் காற்றாய் கலந்தவனே
ஒரு நிமிட பார்வையில்
உயிரில் உறைய வைத்தவனே
கண்ணுக்குள் உன்னை நிறுத்தி
கண்மூடி உன் உருவம் காண செய்தவனே
உன்னிடம்  காணும் ஆணழகை
கண்டதில்லையே என் கண்களிலே
யார் இவனோ ?  இவன் .தான்
மாயவனோ அந்த மன்மதனோ ,,,,,,,
~ அன்புடன்  யசோதா காந்த் ~

5 Responses
  1. SIVAYOGI Says:

    எதார்த்தம் ஏக்கம் இவைகளுக்கு இடைப்பட்ட கவிதை இது ...


  2. நன்றி நண்பர் சிவயோகி அவர்களே


  3. RAJAN NELLAI Says:

    உன்னிடம் காணும் ஆணழகை
    கண்டதில்லையே என் கண்களிலே
    யார் இவனோ ? இவன் .தான்
    மாயவனோ அந்த மன்மதனோ ,,,,,,,யார் இவனோ !........nice........


  4. நன்றி நண்பர் ராஜன் நெல்லை அவர்களே


  5. Anonymous Says:

    இவள் இவள் என்றே கவிதைகளை பார்த்து விட்டு
    இவன்
    என்பதும் சற்று ஆறுதலாகவே இருக்குங்க


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..