மாண்புமிகு மானிடன் !...




முற்றும் துறந்த
முனிவனுமல்ல...
கவிதைகள் பாடும்
கவிஞனுமல்ல...
ஞானம் நிறைந்த
ஞானியுமல்ல...
சத்தியம் பேசும்
மஹானும் அல்ல...
தானங்கள் செய்யும்
தர்மனும் அல்ல...
தீயவை செய்யும்
தீயவனுமல்ல...
பொய்கள் மட்டும் பேசும்
பொய்யனுமல்ல...
திருட்டுகள் செய்யும்
கள்வனுமல்ல...
அட்டுழியங்கள் செய்யும்
அரக்கனுமல்ல...
மூடத்தனம் காட்டும்
மூடனுமல்ல...
ஒன்றுமே தெரியாத
வெகுளியுமல்ல...
கேட்ட வரம் தரும்
கடவுளுமல்ல...
கடவுளை வெறுக்கும்
நாத்திகனுமல்ல...
கடவுளே கதியென்றிருக்கும்
ஆன்மீகவாதியுமல்ல...
மற்றொருவர்கள் ஆட்டிப்படைக்க
பொம்மையுமல்ல...
நான் மனிதன்
இன்பம் துன்பம் தெரிந்தவன்
மாண்புமிகு மானிடன்....
~ அன்புடன் யசோதா காந்த் ~

2 Responses
  1. RAJA. Says:

    மாண்புமிகு மானிடன்....eppadiyellam iruppar enbathai simple aha thelivaga solli irukkirergal...YASOTHA...


  2. நன்றி நண்பர் ராஜா அவர்களே


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..