என்னவனே
புரட்டி பார் என் டைரியின் பக்கங்களை
அதில் பல புதையல்களாக
பல ரகசியங்கள் ...
நீ என் அடிமனதில் இருப்பதால்
உன்னை பத்தியும் சில வர்ணனைகள்
வாழ்கையின் வலிகள்
மனிதர்களின் மனங்கள்
என் துன்பம் ,,என் இன்பம் ..என் காதல்
நான் செய்த தவறுகள் கூட
எனக்கே மறந்த நிகழ்வுகள்
புத்தம் புதிதாய் ..
பக்கங்கள் ஒவ்வொன்றும்
காலம் நேரம் நாள் கணக்கில் ..
நகர்ந்த நாட்களும் ...
மறையாத எழுத்துக்களால்
என் மறைவுக்கு பின் கூட
இந்த டைரி பேசும்
பல கதைகள் .......
~ அன்புடன் யசோதா காந்த் ~
superb.......
நன்றி பிரசாத்