கறவை மாடுகள்...




எங்களுக்கு ரொம்ப வருத்தமுங்க
சொல்வதற்கு எங்களுக்கு தயக்கமுங்க
மறுக்கமுடியாத உண்மைங்க
மனுசங்க நீங்க மறுப்பீங்க
ஆளுக்காளு அக்கறையா சொல்லுவீங்க
தாய் பாலு ரொம்ப முக்கியம்னுங்க
பிறக்கும் பிஞ்சு குழந்தைகளுக்கெல்லாம்
சீம்பாலு ரொம்ப ரொம்ப முக்கியம்னுங்க
அது உங்களுக்கு மட்டும்தான் பொருந்துதுங்க
எங்களுக்கோ ஏறுமாற  நடக்குதுங்க
எங்க புள்ளைகளுக்கு  தான் ஏனோ
தாய் பாலு கொடுப்பினை இல்லீங்க
சீம்பாலோ கிடைக்கிறதே இல்லீங்க
ஊருக்கெல்லாம் பால் நாங்க கொடுக்குறோமுங்க 
நாங்க பெத்த புள்ளைங்களுக்கு பாலாகுதுங்க
புண்ணாக்கும் தவிட்டு தண்ணியும் தானுங்க
யுக யுகமா இதுதான் நடக்குதுங்க ...
( குறை கூறும்  கறவை மாடுகள்  )
~ அன்புடன் யசோதா ~

1 Response
  1. Anonymous Says:

    MADUKALA MEEL MANITHARI KATTILUM


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..