நானும் சொல்வேன்..



கோவில் மீது நம்பிக்கை இல்லை - எனக்கு
கல்லுக்கு காது கேட்குமோ
கல்லும் வாய் பேசுமோ
நாத்திகன் என்பார்கள் என்னை
இப்போதல்லவா நாத்திகன் ஆனேன்
ஆயிரம் வேண்டுதல்கள் நானும் செய்தேன்
ஏதும் ஈடேறவில்லை
ஒன்றேனும் நடந்திருந்தால்
நானும் சொல்வேன்
நீ கல் இல்லை
கடவுள் என்று
(மன்னிக்கவும் தெய்வத்தை நிந்திக்கவில்லை .....விரக்தியில் )
~ அன்புடன் யசோதா ~

0 Responses

எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..