காதல் திருமணம்..


கண்களில் கனவுகளை சுமந்து
அன்பு மிக்க உறவுகளை துறந்து
இரவோடு இரவாய் உன்னோடு
கைபிடித்து நடந்தேனே
என் காதலா...
உன்னோடு நான் நடக்கும் பாதையில்
பூக்களை படுக்கை ஆக்குவாய்
என் விழிமூடும் இமையாவாய்
என் காலமெல்லாம்
என்னை சாய்த்து கொள்ளும் தூணாவாய்
என்றெண்ணி கரம்பிடித்தேன்
ஆனால் எல்லாம் தலைகீழானதே
நான் கண்ட ஈரம் கானல் நீரானதே
முட்கள் நிறைந்த பாதையானதே
நான் மட்டும்  அழுதால் போதாதென
என்னோடு சேர்ந்தழ
இன்னுமொரு துணை தந்தாயே
பிள்ளை உருவில் ....
~ அன்புடன் யசோதா ~

6 Responses
  1. RAJAN NELLAI Says:

    கண்களில் கனவுகளை சுமந்து
    அன்பு மிக்க உறவுகளை துறந்து
    இரவோடு இரவாய் உன்னோடு
    கைபிடித்து நடந்தேனே
    என் காதலா...



    ஆனால் எல்லாம் தலைகீழானதே
    நான் கண்ட ஈரம் கானல் நீரானதே
    முட்கள் நிறைந்த பாதையானதே
    நான் மட்டும் அழுதால் போதாதென
    என்னோடு சேர்ந்தழ
    இன்னுமொரு துணை தந்தாயே
    பிள்ளை உருவில் .............


    உண்மை!!!!!!!!!!


  2. அந்த பெண்னை காதலித்தவன் மனிதனாக இருக்க முடியாது.


  3. pearl Says:

    கடவுள் இருக்கிறார் பார்த்துகொள்வர் உங்கள் கடமையை செய்யுங்கள் வெற்றி நிச்சயம்


  4. நன்றி நண்பர் ராஜன் நெல்லை அவர்களே


  5. நன்றி நண்பர் லோகன் அவர்களே


  6. நன்றி நண்பர் பிர்ல்(முத்து) அவர்களே


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..