கை பாத்து குறி சொல்லும்
நரிக்குறத்தி பொண்ணு வந்தா
எல்லாருக்கும் கை பாத்து
கணக்கா குறி சொன்னா
வேலப்பன் பொண்ணு முனியம்மாக்கு
கை காட்டி எதிர்காலம் கேட்டு குறி பாக்க ஆசை ..
முந்தானைல முடிச்சு வச்ச
சில்லறைய எடுத்து குறி கேக்க போனா
கை நீட்ட சொன்னா
குறி பாக்கும் குறத்தி
பாவிமக கையில கைரேகை இல்ல
நாலஞ்சு வீட்டு பத்து பாத்திரம் தேச்சு
கைரேகை எல்லாம் காணாம ...போச்சு
~ அன்புடன் யசோதா ~
எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..
நன்றிகளோடு
யசோதா காந்த் ..