சூரியகாந்தி..


என் காதலா (சூரியன்)
நீ வரும் வழி பார்த்து நாணி கோணி
நிற்கின்றேன்....
காலை நேரம் உன்  பார்வையால்
லேசான சூடு தந்து
என்னை தலை நிமிர்ந்து நிற்க வைக்கிறாய்
நானும் உன்னை நேருக்கு நேர் பார்த்து
பரவசம் அடைகிறேன்
என் நுனி முதல் அடிவரை
மின்சாரம்  பாய்கிறதே
அந்த சுகம் முழுதாய் அனுபவித்து முடியும் முன்
ஏதோ கோபம் வந்தது போல்
சுள்ளென சுட்டெரிகிறாயே
நான் நிலைகுலைந்து போகிறேன்
கருகி போய்விடுவேனோ என துடிக்கிறேன்
என் துடிப்பு கண்டு மனமிரங்கி
கொஞ்ச நேரத்தில் ...உன் கோபம் தணித்து
இளம் காற்றை என் மீது வீச செய்து
என்னை தாலாட்டி உறங்க செய்து,,
மாலையில் மாயமாய் மறந்து விடுகிறாய்
இரவாகியதும் தனிமை என்னை வாட்டுகிறது
பனியும்,,குளுரும் என்னை நடுங்க செய்து
துவண்டும் சுருங்கியும் போகிறேன்
மீண்டும்  சீக்கிரம் விடிந்துவிட கூடாதா
என காத்திருக்கிறேன்
உன்னை பார்த்து சிரிக்க
நான் பூத்து விரிய  ...
அன்புடன் உன் சூரிய காந்தி ......
~ அன்புடன் யசோதா~

0 Responses

எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..