வசந்த காலம்...


அந்த நாள்
நான் மறக்க முடியாத நாள்
நாள்
வாழ்வில்
எல்லைவரை சென்ற நாள்
நீ வந்தாய்
கரம் தந்தாய்
என் குறை கேட்டாய்
உன்னோடு இனி
என்றும் நானென்றாய்
இருண்ட என் வாழ்வில்
ஒளி தந்தாய்
என் வலிக்கு
மருந்தானாய்
நீரற்ற வேராய் இருந்தேன்
நீர்ஊற்றி தளிர்விடச் செய்தாய்
என் இலையுதிர் காலம்
போனது
இனி எனக்குள்
உன்னால் செழிக்கும்
வசந்த காலம் வந்தது...
~ அன்புடன் யசோதா காந்த் ~

5 Responses
  1. SIVAYOGI Says:

    கரையை தொட்ட அலைகள் வாழ்க !
    வசந்தம் வாழ்த்த கவிதை வாழ்க!


  2. நன்றி நண்பர் சிவயோகி அவர்களே


  3. Logan Says:

    நீரற்ற வேராய் இருந்தேன்
    நீர்ஊற்றி தளிர்விடச் செய்தாய்
    என் இலையுதிர் காலம்
    போனது
    இனி எனக்குள்
    உன்னால் செழிக்கும்
    வசந்த காலம் வந்தது...
    அருமையான வரிகள் .


  4. நன்றி நண்பர் லோகன் அவர்களே //


  5. Anonymous Says:

    வாசம் வீசும் கவிதை.....நிச்சயம்
    இது வசந்த காலத்தின் வருகைதான்!!!!!


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..