காதல் வந்தது ..



கனவில் உன்னை கண்டேன்
கவிதை வந்தது இன்று
கனாக்காணும் நேரம்
உனை காண்கிறேன்...
உனை கண்ட போதோ
உனக்குள் சிக்கி தவிக்கிறேன்
நீ என் உணர்வில் மிதந்து
உயிரில் கலந்த போதோ
உன்னால் சிரிக்கிறேன்
உன்னை ரசிக்கிறேன்
உன்னால் எனக்கு
இந்த உலகம் பிடித்தது
இந்த வாழ்க்கை இனித்தது
கனவுகளில் நீ  வருவதாலோ
பகலில் கூட
இமைகள் இரண்டும்
திறக்க மறக்கிறது...
உன்னை கண்மூடி காண துடிக்குது.......
~ அன்புடன் யசோதா ~

5 Responses
  1. காதல் வந்ததால் கவிதை வந்ததா ...
    கவிதை வந்ததால் காதல் வந்ததா....


  2. நன்றி நண்பர் தினேஷ் குமார்


  3. எண்ணுகின்றேன் எண்ணங்கள எல்லாம் தருகின்றான்
    உன்னுகின்றேன்உண்ண உண்ண ஊட்டுகின்றான் /


  4. எண்ணுகின்றேன் எண்ணங்கள எல்லாம் தருகின்றான்
    உன்னுகின்றேன்உண்ண உண்ண ஊட்டுகின்றான் /



எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..