
விட்டு கொடுக்கும் எண்ணம்
எள்ளளவும் இல்லையே என்னிடம்
பிடிவாதம் ஒன்றே...தொடரும்
தொடர்கதையாய் ..
பேசி தீர்க்கும் விஷயத்திற்கெல்லாம்
பேசாமல் இருந்து பெரிதாக்கி ..
நான் தொலைத்த உறவுகள்
மீண்டும் கிடைக்குமோ ?
கொஞ்சி மகிழ்ந்த ,
ஆறாம் வகுப்புதோழி
எனக்காய் அழுத .
எட்டாம் வகுப்பு கமலா
எதையும் எனகாய் செய்யும்
கல்லூரி நட்பு மீனா
இன்னும் எத்தனை எத்தனை
நடப்புக்களை நான் இழந்தேன்
பாழாய் போன ஈகோ வந்திராவிட்டால் ....
இன்று இருப்பார்ள் என் அருகே
என் உயிர் தோழிகள்...