
காளை ஒருவனை கண்டேன்
கண்ட அவனோ கள்வன் கோபம் நான் கொண்டதால்
விழிகள் எனும் சிறைக்குள் வீழ்த்தி தண்டித்தேன் ...
அவனும் என் தீர்ப்பறிய
நெஞ்செனும் சிறைகூட்டில் விழுந்தான் என் காதலையே ஆயுள் தண்டனையாய்நான் தீர்ப்பெழுத
நானும் கள்வனின் காதலி ஆனேன் ...
விரும்பியே நானும்
அவன் மடியில்விழ
அவனோ
தன் பரந்த தோள்களில்
விரிந்த மார்பினில் அணைத்துகொண்டான்
ஆயுள் கைதியாய் ...
இருவரும் காதல் சிறைக்குள்
இந்த ஜென்மம் தீர்ப்போம் ..
~அன்புடன் யசோதாகாந்த்...