ஓயாத அலைகள்............

கடல் அலையே நீயும் எனை போல்  வழிமேல் விழிவைத்து யார் வரவை நோக்கி காத்திருக்கிறாயோ ? என் உள்ளின் தவிப்பை உன்னுள்ளும் காண்கிறேனே  சலிப்பின்றி  ஓயாமல் வந்து வந்து செல்கிறாயே  திரும்பி செல்லும் உன் முகத்திலோ மீண்டும் வரும் புறப்பாடே.. விட்டு சென்ற காதலன் மனம் கனிந்து வருவான் என காத்துருகின்றயோ ? என் கண்ணீர் உப்பு சுவை சிறிதளவே நீ வடித்த கண்ணீரோ .. உப்பாகவே மாறுகிறதே ! நம் இருவரின் தேடலின் முடிவேன்றோ ? போய் சேரா ஊர்தேடி பயணமோ நீயும் நானும் ..................??????????? ~அன்புடன் யசோதா...