
ஏழை மக்களின் உபயோகத்தில்
கூடுதலாய் நாளிதழ்கள் ..
படிப்பதற்க்காய் மட்டுமல்ல
கழிவுகளை துடைப்பதற்கும்
குடிப்பதற்கே தண்ணீர் இல்லையாம்
கழுவுவதற்க்கோ? இல்லைவே இல்லை
தண்ணீர் இருந்தும் ......
நாகரீகம் மேலோங்கியதால்
வெளிநாடுகளிலோ
கழிவறையில் காகிதங்கள்
தண்ணீர் இல்லாமல் நம் நாட்டிலோ
இன்றும் கிராமங்களிலும்
கழிவுகளை சுத்தம் செய்வதும்
காகிதங்களே....
~அன்புடன் யசோதா காந்த் ~
...