
தேனினும்இனிமை உண்டோ ?வேம்பின் சுவையும் விரும்புவார் உண்டோ ?
இறைவன் தந்த வாழ்வினிலே
இனியவை மட்டும் அனுபவித்து
துன்பம் தவிர்க்க முடியுமோ?
இன்பத்தில் இன்புறும் மானிடன்
துயரத்தால் துவளுவதேனோ ?
உலகின் உயிர்கள் எல்லாம்
ஒரே நிலை அடைய முடியுமோ?
பஞ்சு மெத்தையில் ஒருவனும்
வீதியோர மண்படுக்கையில் மற்றொருவனும் ஏனோ?
முரண்பாடான கேள்விகளுடன் ...
முறையான பதிலை தேடி ...(?)
~அன்புடன் யசோதா காந்த்...