
நிலவுக்கு குளிரில்லை
வானவில்லில் வண்ணங்களும் இல்லை
பூவுக்கு வாசமில்லை
தேனுக்கு சுவையும் இல்லை
சூரியனுக்கு ஒளியில்லை
இரவுக்கு இருளும் இல்லை
மனிதர்களுக்குள் காதல் இல்லை
எனக்குள் நீயும்இல்லை
உனக்குள் நானில்லை
உடலில் உயிரும் இல்லை
நீ என்னை விட்டு பிரிந்த கணம் முதல்
அனைத்தும் நேருக்கு மாறாய் ..
~அன்புடன் யசோதா காந்த்...