எனக்குள் ஒரு தேடல்.....

வாழ்கையில் அவசர ஓட்டத்தின் நடுவில் வாழ்ந்ததையும் தேடலாய் தேடல் என்பதா ? ஆசை என்பதா ? தீராத ஏக்கம் என்பதா ? கண்கள் மூடி கிடக்கும் நேரம் பின்னோக்கியே ஓடும் மனம் .. ஆரம்ப பள்ளியின் ஆசிரியர் முகங்கள் ஒன்றாய் திரிந்த தோழர்களின் முகங்கள் உறுதி கொண்டேன்....எனக்குள் நாளை முதல் ஒன்று சேர்க்கவேண்டும் ஒவ்வொரு வகுப்பிலும் நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ... வாழ்பவர் எத்தனை பேரோ மறைந்தவர் எத்தனை பேரோ இல்லை மறந்தவர்தான் எத்தனை பேரோ முகங்கள் தெரியா பெயர்கள் பெயர்கள் தெரியா  முகங்கள் இன்றும் நினைவில்... தேடுதல்...