பொய் ...

பொய் சொன்னதால் இறந்ததே  என் மனம் உயிர் அற்ற ஜடமாகி உடலிலே ஊனமாகி பேச்சின்றி ஊமையாகி நானோ பாவியாகிபோனேனே !  அறியேன் இதற்குமுன் இதுபோல் ஒருநிலை கொலைக்குற்றம்  சிறிதாகி என் பொய் குற்றம் பெரிதானதே... இல்லாத  ஒன்றை இருப்பதாய் சொல்லி சுயம் ஒன்றே சிந்தனையாய் யார் என்னை மன்னிப்பாரோ தெய்வம் கூட பொறுக்குமா பாவி நான் செய்த பாதகத்தை .. ~அன்புடன் யசோதா காந்த்~ ...