
பொய் சொன்னதால் இறந்ததே என் மனம் உயிர் அற்ற ஜடமாகி
உடலிலே ஊனமாகி
பேச்சின்றி ஊமையாகி நானோ பாவியாகிபோனேனே !
அறியேன் இதற்குமுன் இதுபோல் ஒருநிலை
கொலைக்குற்றம் சிறிதாகி
என் பொய் குற்றம் பெரிதானதே...
இல்லாத ஒன்றை இருப்பதாய் சொல்லி
சுயம் ஒன்றே சிந்தனையாய் யார் என்னை மன்னிப்பாரோ
தெய்வம் கூட பொறுக்குமா
பாவி நான் செய்த பாதகத்தை ..
~அன்புடன் யசோதா காந்த்~
...