
இணைந்து நாம் வாழ்ந்ததோ
முத்தான முப்பது வருடங்கள்
எனக்கு அவரும்
அவருக்கு நானும் அன்பாய்
எல்லநேரங்களிலும் ஆதரவாய்
இணைபிரியா நாட்கள்
மனைவி சொல் கேட்டோ மகனோ
பிரித்துவிட்டான்
வெவ்வேறு முதியோர் இல்லங்களில்
இனி என்று சேர்வோமோ ?
ஏக்கத்துடன் என் மனம்
மரணத்தை நோக்கி ..
~`அன்புடன் யசோதா காந்த்...