கோவில் திருவிழா ....

உள்ளூர் அம்மன்கோவில் திருவிழாஊர் மக்களோ ஆர்ப்பாட்டமாய் பெண்களெல்லாம்  பூச்சூடி பொங்கல் வைக்க சிறுவர்களோ ராட்டினம் சுற்ற.. இளவட்டங்களும்,முதுவட்டங்களும் கரகாட்டம் ,ஒயிலாட்டம் வேடிக்கை பார்க்க வயதான பெண்களோ வில்லுப்பாட்டும் ,, கதைகளும் கேட்டு இருக்ககெடா கறி விருந்திற்காய்  உறவுமுறைகள்  காத்திருக்க ஒலிபெருக்கியில் வரி பணத்திற்காய் யாரோ குரல்கொடுக்க பரபரப்பாய் ,,கோலாகலமாய் கொண்டாட அமைதியாய் கண்மூடி தழை அசைபோட்டன பூசாரிக்காய்  காத்திருக்கும்  நேர்ச்சை கெடாக்கள் ! ~அன்புடன் யசோதா காந்...