கருணை இல்லா கற்புக்கரசி...

பத்தினி பெண் நீ என்பதால் உன்னை தலை வணங்குகிறேன்மதுரையை நீ எரித்ததால்உன்மேல் எரிச்சல் அடைகிறேன்...ஈ எறும்பினை கொல்வதே பாவம் அன்றோ நீயோ  எத்தனையோ உயிர்களை இரக்கமின்றி கொன்றாயேஉன் கணவன் ஒன்றும் உத்தமன் இல்லையேஉன்னை விட்டு மாதவி காலடியில் கிடந்தவன் ஆயிற்றேஒரு வேளை உத்தமனாய் அவன் இருந்திருந்தால்உலகத்தையே அழித்திருப்பாயோ ??? பெண் என்றால் பேயும் இரங்குமேஇதயமே இல்லாதவளா பெண்ணே நீ ??புத்தகங்கள் வேண்டுமானால் உனை புகழட்டும்எனக்கு உன் மேல் என்றென்றும் கோபமே !~ அன்புடன் யசோதா காந்த்...

மனம்......

காலைக்கதிரவன்கண்சிவந்து நிற்ககாரணம் நான் கேட்கஏதேதோ அவன் சொல்லநேரமும் நகர்ந்தது மெல்ல ..சுள்ளென்று அவன் சுட்டெரிக்கசட்டென்று என் மனமும் எரிச்சல் கொள்ளகுளிர்தரும் மழையே நன்றுநீயோ கொடியவன் என்றேன் ..அவனிடம்புரிந்து கொள்வாய் நீயென எள்ளி நகையாடினான் .. சிறிது நாட்கள் சென்றதும் நான் விரும்பிய குளிர்காலம் வந்ததுசில தினங்கள் அனுபவித்தேன் ஆவலாய்வீட்டின் உள்ளும் புறமும் இதமான குளிர்இடைவெளி இல்லா அடைமழையும் நாட்கள் செல்ல செல்லஅலுத்தது  அதுவும் எனக்கு மழையினால் வேலைகள் கூட முடங்கி போனதுபகலில் கூட இரவின் சாயல்மெல்ல தேடியது...