ராணுவ வீரன் ..

நல்லதொரு வைகாசி மாதமொன்றில் நல்ல நேரம் கூடிய பொழுதினில் வீரமிகு ஆண்மகன் கைகள்தனில் மூன்று முடிச்சு வாங்கிக்கொண்டேன் கழுத்தினில் .. தீடீரென அழைப்பு வந்ததில் புறப்பட்டு சென்றான் சடுதியில் வீரன் அவன் வேலையோ ராணுவத்தினில் பிரியா விடைகொடுத்தேன் மௌனத்தில் ... நான் நடந்து போகின்ற வீதிதனில் வீரன் மனைவி என கேட்கும் வாழ்த்துதனில் என் மனமோ பிரிவை மறந்து பெருமிதத்தில் அவனுடன் சேர்ந்திடுவேன் மற்றொரு பொழுதுதனில் சாய்ந்திடுவேன் வீரனவன் மார்புதனில் நாட்டுக்காய் ஈன்றிடுவேன் பிள்ளைகள் பல ஆனந்தத்தில் வளர்ந்திடுவர் வீரமாய்...