வலி .....

நாட்களும் நொடிகளும்  நகர மறுப்பதேன் ? உண்ணாமல் ...நீர் அருந்தாமல் இருந்தும் பசிப்பதில்லையே  ஏன் ? உறவெல்லாம் உடன் இருந்தும் தனிமை என்னை தழுவியதேன்? இதய துடிப்பு சீராய் இருந்தும் உடலும் மனமும் உயிரற்று இருப்பதேன்? வாழ்க்கையில் மற்ற ஒன்றிலும் தேடல் இல்லையே ஏன்? கத்தியின்றி காயம்இன்றி வலிகள் ஏன்? காதலெனும் நோயினால் உடலும் மனமும் உருக்குலைந்து போவதேன் ? பெரும் பிணிக்கெல்லாம் தீர்வு உண்டே காதல் நோய்க்கு மருந்து இல்லையே  ஏன் ? ஏன் ஏன் ஏன் என்று மனம் மருகி உருகி தவிப்பதேன் ? ~அன்புடன் யசோதா...