Showing posts with label கவிதை..பணம் ... Show all posts
Showing posts with label கவிதை..பணம் ... Show all posts

பணம் ..

பணமே உன்னை வரம் என்பதா
இல்லை சாபம் என்பதா ..

சிலநாள் வாழ்கையில் வந்து வசந்தத்தை வீசுகிறாய்
பலநாள் வராமல் வறுமையில் வதக்கி எடுக்கிறாய்

பகலெல்லாம்   இரை  தேடும்
பறவையாய் அலைந்தும்
இரவாகியும் வீட்டை சேர மனமில்லை
ஏன் தெரியுமா ?

பிள்ளைகளின் தேவைகளை
தீர்க்கமுடியா பாவினானன்றோ
அவரின் முகம் காண மனமின்றி

பாதி இரவாகும் வரை காத்திருந்து
பிஞ்சு விழிகள் உறங்கும் எனத்தெரிந்தபின்னே

திருடனை போல பதுங்கி பதுங்கி
 வீட்டினுள் நுழைகிறேன் ....
கொஞ்சி மகிழும் தந்தை நான்  அஞ்சி நடுங்கி...

வறுமை நிழலவன்  என் கரம்பிடித்து நடக்கின்றான்
பணம் எனும் நல் நண்பன் கைபிடிக்கும் வரை
என்னைப்போல எத்தனைபேரோ தரணியில் ??????????



 ~ அன்புடன்  யசோதா ~