
மஞ்சள் நிலவே
மார்கழி பூவே
கொஞ்சும் நேரம்
கைகூடி வந்ததே
நெஞ்சம் உனக்காய்
நிலைகுலைந்து தவிக்குதே
நெருங்கி வா என் அழகே
நிலவுக்கு போய் மகிழலாம்
அருகில் நீ வந்தால்
அகிலமும் மறந்திடுவேன்
ஆருயிரே அழைக்கிறேன்
வா ஒர் உயிராய் கலந்திடுவோம்
காலமெல்லாம் வாழ்ந்திடுவோம்
காதலெனும் தேசத்தில் ...
~அன்புடன் யசோதா காந்த்...