கடிதம் ...

( வலையும் தொலைபேசியும் வேண்டாமே   ) சொல்ல வந்த கதைகளை சொல்லி முடித்தேன் கடிதத்தில் மெல்லமாய் எச்சில் தொட்டு செல்லமாய் ஒட்டினேன்  தபால் தலையை என் எச்சில் நனைத்து ஒட்டிய கடிதத்தை நீரும் எச்சில் துணையோடு தான் பிரிப்பீரோ  ??நேரில் பகரும் முத்தத்தை  இருவரும் கடிதத்தில் பரிமாறிக்கொண்டோமோ ?.. தபால் காரன் வரும் வழி பார்த்து தவம் கிடக்கிறதே கண்கள் இரண்டும் பதில் கடிதம் வரும்வரைக்கும் வேலைகள் எல்லாம் வீணாக  கிடக்கிறதே கடிதம் கண்ணில் கண்ட பின் தான் மனமும் சொல் பேச்சு கேட்கிறதே  ... கடிதம் சொல்லும்...