விரைவில் வந்துவிடு ...

சாணம் தெளித்து கோலமிடும் முற்றம் பூஜைக்காய் தினம் பறிக்கும் செம்பருத்தி முற்றத்து முல்லை பூக்கள் நீ பரிமாறி முதல் உணவு உண்ணும் காக்கை ஓடி பிடித்து மாலையில் நீ அடைக்கும் கோழி குஞ்சுகள் ஈர கூந்தலில் நீ சுற்றும் துளசி மாடம் ஓயாமல் அமர்ந்தாடும் மர ஊஞ்சல் நம் வீட்டு மாமரத்தில் வந்தமரும் கிளி கூட்டம் உன் கதைகள் தினம் கேட்கும் சமையலறை உன் கைகளோடு கைகலப்பு செய்யும் பாத்திரபண்டங்கள் இவைகளும் என் போல் தவிக்கின்றன மகபேறுக்காய் உன் தாய் வீடு நீ சென்றதை அறியாமல் ~அன்புடன் யசோதா காந்த்...