போதிமரம் .....

நாட்டிலோ பலவகை மரங்கள்போதிமரத்திற்கோ புனித கதைகள்புத்தி வந்து ஆசைகள் களைந்தார் புத்த பெருமான் போதிமரம் தான் காரணம் என்றால்ஆயிரமாயிரம் புத்தர்கள் எங்கே ?? மரம் ஒன்றும் காரணமில்லைமனம் ஒன்றே காரணமாய்... பெண் மண் ஆசைபொன் பொருள் ஆசைஇவைகள் இல்லா மனிதனும் இல்லைஆசைகள் துறக்க போதிமரம் தான்வேண்டுமென்பதில்லை.. என்றோ ஒருவன் புத்தன் ஆனான்போதிமரமும் புனிதமாயிற்றே புத்தனுக்கு ஆசை இல்லை என்று யார் சொன்னது ??ஆசைகளை துறக்கும் ஆசை இருந்ததால் தானேபுத்தனும் துறவி ஆனான் ..~ அன்புடன் யசோதா காந்த்...