
எனை அறியாது ..
உன்னை தொடர்ந்தேன்
விழிகளின் வழியே காதல்
சொல்ல நினைத்தேன்
விலகிவிடுவாயோ என
மெல்ல பயந்தேன்
அன்பினை வார்த்தைகளாக்கி
கடிதம் வரைய நினைத்தேன்
இதயம் தரும் துணிச்சல்
இந்த விரல்களுக்கு இல்லையே
என் காதலை நீ அறிவாயோ
நானும் சொல்லாமல் இருப்பதோ ?
ஒ தென்றலே தூது செல்வாயோ
காத்திருப்பேன் என்னவள் என் மனதறிய
கேட்பாயோ அவளிடம் ...
அவள்நிலைமையும் எனைபோல் தானோ என்று ?
நல்ல பதில் நீ தந்தால் தென்றலே
பூந்தோட்டம் பரிசாய் தருவேன் நான் உனக்கு
~அன்புடன் யசோதா காந்த்...