எல்லாமாய் அவனே ...

அன்பே வலிகள் என்பது என் உடலில் இல்லையே கோபமோ எரிச்சலோ என்னில் நிலைப்பதில்லையே துக்கமும் சஞ்சலமும் என்னை நெருங்குவதில்லையே  உலகே அழியும் என்றாலும் எனக்குள் கலக்கம் இல்லையே தனிமையாய் நான் தனித்து போனாலும் என்னிடம் தவிப்பு இல்லையே யார் என்னை வெறுத்தாலும் நான்  வெட்கி போவதில்லையே இவைஎல்லாம் நீ என்னுள் எல்லாமாய் இருப்பதாலோ என்றென்றும் நான் இன்பத்திலே ~அன்புடன் யசோத காந்த்...