சாதி ....

ஆதியில் சாதி இருந்ததோ ? மேல் மக்கள்  கீழ் மக்கள் உண்டோ ? ஆண் பெண் இருபாலர்  அல்லவா? அன்பென்ற தாய் பெற்ற பிள்ளைகள் அனைத்தும் ஓர் குலம் அன்றோ ? இறந்த உடல்கள் அனைத்தும் பிணம்எனும் ஒற்றை பெயர்தானே ? அறுத்தெறிவோம் ஜாதி எனும் ஆணி வேரை பாரதி கண்ட கனவு பாரதத்தில்  பலிகட்டுமே உறுதி எடுப்போம் தீண்டாமை இனி இல்லை என்று .. அறிவில்லாதோர் காட்டும் இரட்டை குவளை முறை அழிப்போம் சாதி என்ற பெயரில்  அடிமைத்தனம் ஆள்வோரை ஒழிப்போம் வாழ்க பாரத அன்னை வளர்க நம் பாரதம் .. ~அன்புடன் யசோதா காந்த்...