அழகே ...

இயற்கை எழில் கொஞ்சும்  இந்த வனம் இந்த அழகு  இந்த தனிமை  இந்த இனிமை  இதமாய் உன்னோடு  இனிதாய் வேண்டும்  இனியவனே என்றும் எப்பொழுதும்  ~அன்புடன் யசோதா காந்த்...

புல்வெளி ....

சில்லென்று வீசும் காற்று சத்தமின்றி சொன்னது என் காதில் உன்னவன் கார் மேகமாய் மாறி உன்னில் மழை பொழிவான் என்று காத்திருந்த நானோ கண்மூடி அனுபவித்தேன் பூமிதனில் புல்வெளியாய் நான் படுத்துறங்க நீ தரும் நீர் துளியால் மெல்ல மெல்ல நனைந்து ஈர ஆடை உடுத்தி நான் மேனியெங்கும் நீ தழுவ குளிரிலும் முத்து முத்தாய் வேர்வைபோல் என் உடலில் பனிதுளியாய் நீ ... ~அன்புடன் யசோதா காந்த் ...

தவமின்றி கிடைத்த வரமே ,,,

என் அன்பு தோழா கண்டதில்லை உன்போல் ஓர் ஆண்மகனை நல்லவர் போல் நய வஞ்சகம் பேசும் சில கயவர்களுக்கிடையே நல்ல மனம் படைத்த தூய துணை நீயடா உள்ளொன்றும், புறமொன்றும் பேசி புறச்சொல்லால் புகைந்த மனம் கொண்டவர் மத்தியில் உண்மை உரைத்து என்னிடம் உயர்ந்து நின்றாயடா போகப்பொருளாய் பெண்ணைக்காணமல் அன்னையாய் , சோதரியாய், பிள்ளை மொழி பேசும் மகளாய் கண்டு நட்புக்கு பெருமை சேர்த்தாய் நட்பே, நல்முத்தே நான் காணும் என் சொத்தே தவமாமின்றி கிடைந்த வரம் நீ இறை தவத்தால் மட்டும் வரம் கிடைக்கும் என யார் சொன்னார் நட்புதவத்தால் வரமாய் நீ...

என்னில் நீ உலகமனாய்...

பத்திரிக்கை, கணனி, அரசியல், பொருளாதாரம் வாழ்க்கையின் வரவு செலவும் சின்ன, சின்ன கதைகள் பேசி குழப்பத்தால் வரும் சில குறைகளையும் சொல்லி கூடவே என் குடும்ப நலன் பேசி அடுக்களை முதல் அலுவலகம் வரை இன்றைய நாளின் முடிவையும் நாளைய நாளின் தொடக்கமும் பரிவோடு பரிமாறிக்கொள்கிறேன் என் தோழா, உன்னால் நானும் என் செல்லிடபேசியும் ஓட்டி பிறந்த இரட்டையராய் இணைந்து போனோம் உறவுகளில் உயர்ந்தவனே என் தோழா உறவுகளால் நிறைந்தவனே உன்னால் நான் உருவமானேன் என்னில் நீ உலகமனாய்... ~அன்புடன் யசோதா காந்த்...

புதிய சமுதாயம் படைப்போம் என்று உறுதிமொழி எடுப்போம் ....

அன்னையர் தினம் ..நண்பர்களுக்குள்ளே வாழ்த்துக்கள் பரிமாறி ...தாயின் பெருமைகளை வாழ்த்திகொண்டும் ...கவிதைகள் பல புனைந்தும் .ஆனந்தமாக அனைவரும் இருந்த பொழுதோ ..நண்பர் ஒருவரின் ..கேள்வி ..மனதை கலங்க செய்தது ,,,பெண் என்பவள் ..அன்னையாகவும் ..சகோதிரியகவும் ..தோழியாகவும் ..காதலியாகவும் ..மகளாகவும் ,,,இன்னும் பல வித பாத்திரங்களில் தனது கடமையை செவ்வனே செய்கிறாள் ஆனால் மாமியார் எனும்  பாத்திரம் மட்டும் ...தன் கடைமைகளை சரிவர செய்யாமல் ...கேள்விக்குறியாகவே இருக்கிறதே என்று கூறினார் ....சிந்தியுங்கள் அன்பு தோழிகளே...

உயிரிலே கலந்து .....

என் உயிரே எந்தன் அழகே நம்மக்குள் உள்ள காதலை வடித்தேன் ஓர் கவிதையாய் ... இமையாக நீ இருக்க  இமைக்காமல் ரசிக்கின்றேன்  சுமையாக நான் இருந்தும்  சுவையாக சுமக்கிறாயே ...பதுமையாக நீ இருக்க  புதுமையாக பார்க்கிறேன்  பனிதுளியாய் நீ இருக்க  பரவசமாய் ரசிக்கிறேன்  துயிலாமல் நீ இருக்க  துடிப்போடு அணைக்கிறேன்  துணையாக நீ இருக்க  தொலைதூரம் பறக்கின்றேன் ... மழையாய் நீ இருக்க  உனக்குள் குளிர் காய்கின்றேன்  அனலாய் நீ அணைக்க  உன்னில் குளிர்கின்றேன் ....எந்தன்...

ஒற்றையடிப்பாதை ....

உன்னோடு நான் இருவழி பயணமாய் அதில்  தனிமையில் தவிப்போடு நான்  இன்பத்தில் கைகோர்த்து  துன்பத்தில் விழி நீர் கோர்த்தும்  ஒற்றையிலோ ... மரங்கள் தலையாட்டும் சப்தமும்  கூ கூ என கூவும் குயில் ஒன்றும்  கீ கீ என கொஞ்சும் கிளி ஒன்றும்  ஒற்றை பாதையிலும் ஓர் பாதையாய்  நேர்கோட்டில் செல்லும் எறும்புகளும்  என்னோடு துணையாய் ... ~அன்புடன் யசோதா காந்த்...

நிலவாய் அவள் ...

அழகிய நிலவு என் வானில் நீ  அன்பான கனவு என் இரவுகளில் நீ  இன்பமான தொடக்கம் என் விடியலில் நீ  என் பொழுதுகள் நகரும் பொன் நிமிடங்கள் நீ  அனைத்து இன்பங்களின் ஆதாரம் நீ  என் வீட்டின் வெளிச்சம் நீ  என் நாடி நரம்புகளின் நாதம் நீ  என் உயிரின் உயிரோட்டம் நீ  எனதெல்லாம் நீயே நீயே !!! ~அன்புடன் யசோதா காந்த்...

நட்பு ...

எல்லை இல்லா வனத்தில் உயரே உயரே பறக்கிறேன் கள்ளமில்லா சிரிப்பினை கனவினிலும் கூட சிந்துகிறேன் அன்பு எனும் அடைமொழியால் அணையா விளக்காய் எரிகிறேன் ஆண்  பெண் என்ற பாகுபாடின்றி அன்பின் நட்புக்களினால் மிளிர்கிறேன் இறைவன் அருளிய  நட்பு உறவுகளை கற்பென காத்து போற்றிடுவேன் ~அன்புடன் யசோதா காந்த்...