6/21/2012 08:55:00 PM
|
by யசோதா காந்த்

தாயே
உன்னைப்போல் யாருண்டு
உள்ளம் பூரித்து வாழ்த்துகிறேன்
ஐந்தறிவோ ஆறறிவோ
தாய்மை ஒன்றல்லவோ
அவள் எண்ணங்களும்
ஒன்றல்லவோ ...
சேயின் பசி தீர்த்து
தானும் மகிழ்ந்திடுவாள்
~அன்புடன் யசோதா காந்த்...
6/15/2012 08:42:00 PM
|
by யசோதா காந்த்

தாய் பசுவின் மடி அது
மானிடன் கைவசம் ஆதலால்
பால் இன்றி தவித்த
பாவம் கன்று அதற்கு
பாய்ந்து வந்து பசி ஆற்றினாள்
பாவை அவள்
தாய்மையின் தவிப்பில் ...
பெண்ணல்ல அவள்
தெய்வம் என கண்டேன்
~அன்புடன் யசோதா காந்த் ~&nb...
6/13/2012 01:01:00 PM
|
by யசோதா காந்த்

வளைந்தும் நிமிர்ந்து நிற்கிறாள்
தன் வண்ணங்களால்
சிறிது நேர தோற்றமெனினும்
நினைவிலோ நீண்டதாய்
வளைவினால் வானத்தை வளைக்கிறாள்
வர்ணங்களால் ஜாலம் காட்டி
வான வேடிக்கை காட்டுகிறாள்
தன் அழகால் அவள்
நம் இதயத்தை சுருட்டி அல்லவா செல்கிறாள்
~அன்புடன் யசோதா காந்த~&nb...
6/03/2012 06:10:00 PM
|
by யசோதா காந்த்

விழிகளிலோ முழு நிறைவு
எதுவுமில்லை குறைவு
அன்னை அவள் தோள் ஆதரவில்
உலகையே (அன்பில் )ஆளுவேன் ஆணவத்தில்
தாய் அவள் கைகளில் இருந்தால்
வேறெதுவும் தேவை இல்லையே ....
~அன்புடன் யசோதா காந்த்...