புரியாத புதிராய் ...

புரியாத புதிராய் என்னுள் பதிந்தாய் புயலென என்னை புரட்டிப் போட்டாய் கலையாத   கனவாய் மனதில் நின்றாய் சின்ன சின்ன சிணுங்கல்களோடு சண்டைகள் தொடர்ந்தாய்மின்னலை போலே மின்னி மறைந்தாய் உயிரோடு கலந்தவனே என் உண்மை நிலை நீ அறியாயோ ?நம் நெருக்கத்தின் நாட்களை நம் பிரிவின் நொடிகள் கொன்றுபோட்டதேநான் துவளும் நிலை நீ தெரிந்தாயோ ?நீயும் என் நிலை தானோ ?நிலை அறியாது துடிக்கிறேன் என் அன்பே வினாக்கள் பல என்னில் .....பதில் கூறாயோ எனை சேராயோ என் உயிரே ...~அன்புடன் யசோதா காந்த்...

கண்மணியே ....

கண்மணியே ... நாலு வரியில் . நறுக்கென உனக்காய் கவிதை  எழுத முயன்றும் தினம் தினம் தோற்கிறேன் .. கவிதையாய் எழுத தொடங்கி கட்டுரையாய் அல்லவா முடிக்கிறேன் எனதன்பே .. எழுதி முடியா வார்த்தைகளாய் நீ என்றும் என்னில் .. ~அன்புடன் யசோதா  காந்த்~ ...