11/18/2013 12:04:00 PM
|
by யசோதா காந்த்

பிடிவாதம்
***********:
தெளிந்த பாலை
குடிக்க சொன்னாலும்
அசைவு ஒன்றும் இல்லை
பதில் சொல்லுங்கள் என
ஆயிரம் முறை கேட்டாலும்
சட்டை செய்வதில்லை ..
கதறி அழுது அடம் பிடித்தாலும்
கண்டுகொள்வதே இல்லை
பற்றி எரிந்து தேகமெங்கும்
தீ படர்ந்தாலும்
வேதனையோ விசும்பலோ வெளிப்படுத்துவதே இல்லை
முடிவு செய்தால்
அதிலிருந்து .
பின் மாறாத
பிடிவாதக்காரர்கள் தான் இவர்கள்
.மரணம் எனும் ஏட்டில் கையெழுத்து இட்ட இறந்தவர்கள் ...
~யசோதா காந்த்...
4/29/2013 12:41:00 PM
|
by யசோதா காந்த்

மலடி ... ************ ஆணென்றும் பெண்ணென்றும் ஆண்டுக்கொரு மகப்பேறு அளவில்லா பூரிப்பும் எல்லையில்லா ஆனந்தமும் .. பிள்ளைகள் வளரும் அழகை ஆயிரம் கண்கொண்டு கண்டு ரசித்தாள் விளையாட்டு பொருட்களையோ பொக்கிசமாய் பாதுகாத்தாள்.. சுவற்றில் குழந்தைகளின் கிறுக்கல்களை சுண்ணாம்பு பூசாமல்..ஓவியமாக்கினாள் பட்டம் பெற்றபோதும் ..பதவிகள் அடந்தபோதும் பால் கொடுத்த முலைகளும் .. கருவை வளர்த்த கருவறையும் மகிழ்ந்து ...கொண்டாடியது ... மலடியாகவே இருந்திருக்கலாமே என மனம் கசந்தாள் .. அடைக்கலமாய் முதியோர் இல்லத்தை அடைந்த போது .......
3/10/2013 09:26:00 PM
|
by யசோதா காந்த்

பெண்மை சாபமோ....
*************************************
நெஞ்சம் பொறுக்குதில்லையே
இந்த நிலைகெட்ட மானிடரை
நினைக்கையிலே ....
இந்தவரிகள் எத்தனை உண்மை வரிகள் ...
பெண் என்பவள் ..தாயாய் ..சகோதரியாய்,,மனைவியாய் ..குழந்தையாய்
..இன்னும் பல உருவங்களில் இந்த உலகத்தை வலம் வருகிறாள் ..அப்படி பட்ட பெண்ணை
மரியாதை கொடுத்து அன்பு செலுத்துவோர் பலர் ..ஆனால் பெண்ணை போதை பொருளாய் சிலர்
பார்ப்பதால் ஆண் வர்க்கத்திர்க்கே தலை குனியும் நிலை அன்றோ ...
இன்றைய நாட்களில் பல அதிர்ச்சியான செய்திகள்...காண்கிறோம் கேட்கிறோம்
நம்...
2/27/2013 06:39:00 PM
|
by யசோதா காந்த்

தமிழ் தாய் ...*********ஆதியில் தோன்றினாள்அழகிய மங்கையவள் ..
தெவிட்டாத இன்பம் தரும்தெளி தேன் அமுதமும் அவள்
கல்லாதவரையும் கவி எழுத செய்யும்காவிய தலைவி அவள் ..
அன்னை அவளை கற்றேபட்டம் பெற்ற பண்டிதர் மேதைகள் பலர்
உணர்வுகளில் அன்பை ஊற்றிஓர் இனமாய் நம்மை சேர்ப்பாள்
எங்கோ நம்மிலோருவனுக்கு துன்பம் நேர்ந்திடினும்உலகையே பதறி எழ செய்வாள்
தாயின் பெயரை நாமும் சூட்டிஅழைத்து மகிழ்வோம் பிள்ளை செல்வங்களை ..
.
செந்தமிழ் சொல்லெடுத்து ..அழகாய் பாட்டு இசைத்து ..
தமிழ்...
1/17/2013 11:42:00 AM
|
by யசோதா காந்த்

உன் பாட்டன்
எதேச்சையாய்
சுவைத்து துப்பிய விதை
விருட்சமாய் நிற்கிறேன் ....
எப்போது மீண்டும்
எனை விதைப்பாய்
உன் பேரனுக்கு
கதைகள் சொல்ல ??...
~யசோதா காந்த்&nbs...