9/22/2011 12:26:00 PM
|
by யசோதா காந்த்
ஆசையாய் பெற்றெடுத்தாள்
அழகிய குழந்தை ஒன்று
கொஞ்சி மகிழ்ந்தினர் குடும்பத்தினர்
குழந்தையின் வளர்ச்சியிலோ
மாற்றங்கள் ஒன்றுமில்லை
நாட்கள் நகர நகர மெல்ல புரிந்தது
மனவளர்ச்சி இல்லா குழந்தை என்று
மருத்துவர் கூறினார்
மற்றுமொரு யோசனை
நிறைவாய் மற்றொன்று
ஆரோக்கியத்துடன் பெறலாமே என்று
தீர்க்கமாய் மறுத்தாள்
பிள்ளையை அணைத்துக்கொண்டு
இன்னுமொன்று பெற்றால்
இதை கவனிக்க தவறுவோமோ என்று…
இன்பமோ துன்பமோ
இக்குழந்தையே போதுமென்று
இறைவனிடம் மன்றாடினாள்
என் பிள்ளைக்கு அறிவையும்
நீண்ட ஆயுளையும் கொடுப்பாயா என்று !
என் கண்களில்
அவள் தாய் அல்ல ..
தெய்வத்தின் உருவமாய்
அவளே தெய்வத்தாயாய் …
~ அன்புடன் யசோதா காந்த் ~
9/18/2011 12:18:00 PM
|
by யசோதா காந்த்
இவள் ஒரு ஏமாற்றுகாரி
நான் காதலிக்கிறேன் என்று தெரிந்தும்
என்னிடம் கண்ஜாடை காட்டி நிற்கிறாள்
பகலெல்லாம் முக்காடு இட்டு கொண்டு
இரவானால் மட்டும் முகம் காட்டுவாள்
சிணுங்கி மருகி தேய்கிறாள்
பின் மெல்லமாய் வளர்ந்து
ஒளிவீசி மிளிர்கிறாள் ..
என்னை ராப்பாடியாய்
ராகம் பாடவைத்து
மேகதிரையில் மறைந்து
கண்ணாம் பூச்சி ஆட்டம் ஆடுகிறாள்
நான் மோகமாய் பார்ப்பதை கண்டு
மௌனமாய் சிரிக்கிறாள் ...
என்று தான் நானும்
நிலவு பெண்ணே ..உன்னோடு
பொன் நிலாகாலத்தில்
உலா வருவேனோ ..
~ அன்புடன் யசோதாகாந்த் ~
9/17/2011 11:35:00 AM
|
by யசோதா காந்த்
கண் மூடி கிடந்தேன்
கண்டேன் ஒரு புது உலகம்
ஜொலிக்கும் ஒரு பெரும் நகரம்
அங்கே ஜாதி இல்லை
ஏற்ற தாழ்வு இல்லை
ஆட்டி படைக்கும் அதிகார வர்க்கம் இல்லை
அங்கே எல்லோரும் மன்னர்கள்
மதிப்புமிக்க மனிதர்களாக
போட்டி பொறாமை இல்லை ...
அனைவருக்கும் ஒரே உணவு
ஒரே ஆடை ஒரே ஊதியம்
பெண்களெல்லாம் தேவதைகளாக
குழந்தைகளோ தேவகுமரர்களாக
ஊரெங்கும் தோரணம்
காணுமிடமெல்லாம் விழாக்கோலம்
வானத்திற்கும் பூமிக்கும்
வாசல்படியும் அழகிய ஏணிபடியும்
கண்திறக்க மனமில்லை..
கனவிலாவது இவ்வதிசயங்கள்
தொடரட்டும் என்று .......
~ அன்புடன் யசோதாகாந்த் ~
9/13/2011 05:10:00 PM
|
by யசோதா காந்த்
சுடும் பார்வையால் என்னை சுட்டவளே
கடும் சொல்லால் கலங்க செய்தவளே
நெடும் தூரம் என்னை ஓடவைத்து
தடுமாறி தடம் புரள வைத்தாயே
பெரும் குற்றம் என்ன என்னிடத்தில் ?
காதலிப்பது குற்றம் என்றால்
இவ்வுலகில் காதலே குற்றமடி ..
உன் பார்வை தணியாதோ
உன் பூவிதழ் திறந்து காதலை சொல்வாயோ
மெல்ல மெல்ல உறிஞ்சும் என் உயிரை
ஒரேயடியாய் பறித்து விடு என் செல்லமே ..
உன் கையால் சாவென்பதும்
மகிழ்ச்சியடி எனக்கு ......
அன்புடன் யசோதா காந்த்
9/11/2011 10:24:00 PM
|
by யசோதா காந்த்
நம் பாரதநாட்டின்
முதுகெலும்பாம் விவசாயி
இன்று அவனுக்கும் வேலையில்லா திண்டாட்டம்..
விவசாயிகள் அதிகமானதால் அல்ல ..
விவசாயம் இல்லாமல் போனதால்
செழிப்பாய் இருந்த கிராமங்களும்
இன்று நகரமாய் மாறும் முயற்சியில்
காடுகள் வெட்டி சமமாக்கி
வயல்வெளிகளை தரிசாக்கி
தரிசாக்கிய நிலங்களை காசாக்கி
விவசாயத்தை அழிக்க துடிக்கும் மக்கள்
ஆதரவாய் அரசாங்கமும் ..
இன்றோ காடு கரைகளும் வயல்வெளிகளும்
அடுக்கமாடிகளாய் கடைவீதிகளாய்..
துரிதமாய் சாகும் விவசாயம்
துடிதுடித்து குழியில் விழும் விவசாயியும்
இன்றே சேமித்து வைத்து விட்டேன்
எனது கணனியில் ..
வயல்வெளிகளையும் பயிர்வகைகளையும்
புகைப்படங்களாய்
அரிசி செடி எதுவென கேட்கும்
எதிர்கால என் தலைமுறைகளுக்காய்
~ அன்புடன் யசோதா காந்த் ~
9/08/2011 12:47:00 PM
|
by யசோதா காந்த்
மலைகளில் தெரியும் மந்தாரம்
சிலைகளில் தெரியும் மௌனம்
பேசும்போது விழும் வார்த்தைகள்
பேசாத போது விழுங்கும் உணர்ச்சிகள்
வளர்ந்து ஒளி வீசும் பிறை அழகு
தேய்ந்து மறைந்த நிலவழகு
பல் முளைக்கா மழலை சிரிப்பு
பல் போன முதுமை நகைப்பு
விழிகளில் காணும் காட்சிகள்
மொழிகளில் காணும் இனிமைகள்
வானுயர்ந்த நீண்ட மரங்கள்
குறுகிய புல் பூண்டுகள்
குளிர் நடுங்கும் பனி காலம்
கோடை தரும் கொதிப்பு
ஆறறிவு மனிதனும்
ஐந்தறிவு ஜீவன்களும்
இறைவன் படைப்பில் ...காணும்
எல்லாம் அழகே ...
~ அன்புடன் உங்கள் யசோதா காந்த் ~
9/05/2011 01:30:00 PM
|
by யசோதா காந்த்
விட்டு கொடுக்கும் எண்ணம்
எள்ளளவும் இல்லையே என்னிடம்
பிடிவாதம் ஒன்றே...தொடரும்
தொடர்கதையாய் ..
பேசி தீர்க்கும் விஷயத்திற்கெல்லாம்
பேசாமல் இருந்து பெரிதாக்கி ..
நான் தொலைத்த உறவுகள்
மீண்டும் கிடைக்குமோ ?
கொஞ்சி மகிழ்ந்த ,
ஆறாம் வகுப்புதோழி
எனக்காய் அழுத .
எட்டாம் வகுப்பு கமலா
எதையும் எனகாய் செய்யும்
கல்லூரி நட்பு மீனா
இன்னும் எத்தனை எத்தனை
நடப்புக்களை நான் இழந்தேன்
பாழாய் போன ஈகோ வந்திராவிட்டால் ....
இன்று இருப்பார்ள் என் அருகே
என் உயிர் தோழிகள் ..
பாழும் ஈகோ நட்பிடம் கூட
விலை பேசி நிற்கிறதே ...
இன்றுவரை எனக்குள் ........
~ அன்புடன் யசோதா காந்த்~
8/29/2011 06:58:00 PM
|
by யசோதா காந்த்
ஒன்றாம் வகுப்பில் கிடைத்த சிலேட்டு
இரண்டாம் வகுப்பில் தொலைத்த பென்சில்
மூன்றாம் வகுப்பில் கிடைத்த நோட் புக்
நான்காம் வகுப்பில் தொலைத்த பேனா
ஐந்தாம் வகுப்பில் கிடைத்த ஜாமன்ட்றி பாக்ஸ்
ஆறாம் வகுப்பில் தொலைத்த கட்டுரை நோட்
ஏழாம் வகுப்பில் கிடைத்த லீடர் பதவி
எட்டாம் வகுப்பில் தொலைத்த புது வாட்ச்
ஒன்பதாம் வகுப்பில் கிடைத்த உயிர் தோழி
பத்தாம் வகுப்பில் தொலைத்த ஹால் டிக்கட்
பதினொன்னாம் வகுப்பில் கிடைத்த லவ் லெட்டர்
பனிரெண்டாம் வகுப்பில் தொலைத்த பள்ளி வாழ்க்கை
கல்லூரி போன பின்பும் ஞாபகத்தில்..
கல்யாணம் ஆன பின்போ
கிடைத்ததையும் தொலைத்ததையும்
தொலைந்து போய் தேடுகிறேன்
இன்று வரை...
~ அன்புடன் உங்கள் யசோதா காந்த் ~
8/26/2011 05:45:00 PM
|
by யசோதா காந்த்
வாலிபத்தின் கடைசி நாட்களாய்
கடந்தவைகளை திருப்பிப்பார்க்கும் தருணமாய்
ஊன்றுகோலே மூன்றாம் காலாய்
பகைவனை கூட நண்பன் ஆக்கும் பக்குவமாய்
மனம் தெளிந்த நீரோடையாய்
நல்லவைகள் மட்டும் நாடும் குணமாய்
ஆசைகளை துறந்து ஞானியாய்
ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடாய்
அன்பு மட்டுமே தாரக மந்திரமாய்
ஆதரவை நாடும் அப்பாவியாய்
இறைவனடி சேரும் நாளை எண்ணி தவிப்பாய்
மழலை மனதின் மொத்த உருவமாய்
வயோதிகம் .....
~ அன்புடன் யசோதா காந்த் ~
8/25/2011 11:52:00 AM
|
by யசோதா காந்த்
இது ஒரு கனவு தொழிற்சாலை அதிர்ஷ்டம் இருப்பவர் அரங்கேருவர் இல்லாதவரோ அங்கலாய்ப்பார் நட்சத்திரங்களுக்கோ இதுவே உயிர் மூச்சு நமக்கோ இதுவே பெரும்பேச்சு ... கைக்கெட்டா தூரத்தில் கலர் வானம் அதில் மின்னும் நட்சத்திரங்களோ கலைஞர்கள் ஏற்றி விடும் ஏணிப்படிகளாய் மக்கள் ஜெயிப்பவர் ஏராளம் தோற்பவரும் தாராளம் என்றும் வெற்றி கொடி நாட்டட்டும் வாழ்த்திடுவோம் வாருங்கள் ! ... தொடரட்டும் ...தொடரும் இந்த தொடர் கதைகள் ... ~ அன்புடன் யசோதா காந்த் ~
8/24/2011 12:13:00 PM
|
by யசோதா காந்த்
என்னவன்
***********
என்னை சிந்திக்க செய்தவன்
என்னை கவி எழுத செய்தவன்
என் கவிதைகளின் கருவாய் ஆனவன்
என் மனம் அறிந்தவன்
என்னை அணு அணுவாய் ரசித்தவன்
எனக்கு முகவரி தந்தவன்
என் பெண்மையை நான் உணர செய்தவன்
என் நிழலாய் அவன்
என் நிஜமாய் அவன்
என்றும் என் துணையாய் அவன்
என் முதலாய் ....... முடிவாய்
என்றும் என்னவனாய் அவன் !..
~ அன்புடன் யசோதா காந்த் ~
8/22/2011 02:25:00 PM
|
by யசோதா காந்த்
அதிகாலை இங்கு வந்து
பவள முத்துக்களை விதைத்தது யார்?
அள்ளி பொருக்க மனம் ஆசை படுகிறதே
துள்ளி நடக்கும் பாதங்களில்
சின்னதாய் குளிர் சுகம் பரவுகிறதே ...
புல்பூண்டுகளும் ..செடிகொடிகளும்
தலை குளித்து முடித்த பின்
தலை துவட்ட மறந்தனவோ?
தலை காய்த்து விடுவான் என
வானம் நோக்கி ...நேரம் பார்த்து ...
காத்திருக்கின்றனவோ?
நானும் கண் மூடி காத்திருக்கிறேன்
கதிரவனின் கணைகளாய்
எனை அணைக்கும் காதலனை
எதிர் நோக்கி ...
~ அன்புடன் யசோதா காந்த் ~
8/21/2011 04:16:00 PM
|
by யசோதா காந்த்
பூக்களுக்குள்ளும்
*******************
மயக்குகிறேன் நறுமணத்தால்
கொஞ்சலுடன் .. மல்லிகை பூ
வசீகரிகிறேன் என் நிறத்தால் ..
செல்லமாய் கனகாம்பரம் பூ
மரியாதையும் சிறப்பும்
அழகும் எனக்கே எனக்கே ....
கர்வத்துடன் .. ரோஜா பூ
பூஜைக்காய் பிறந்தவள் நான் ....
அழகாய் அரளிபூ
வாடாமல் வாழ்வேன் நான் ...
வாதிட்டது வாடாமல்லி பூ
அபூர்வ வாசனை என்னுடையது ...
மயக்கத்துடன் மரிகொளுந்து
அலங்கரிப்பதே எங்கள் வேலை ...
சாமர்த்தியமாய் ..
சாமந்தி ..செவ்வந்தி பூக்கள்
ஏழூரும் வீசும் என் வாசம் ..
பொறாமையோடு பிச்சி பூ
என்றுமே அழகாய் நாங்கள் ...
ஏக்கத்தோடு காகிதபூக்கள்
மந்திர வாசனை எனக்கே ....
சிணுங்கலோடு மனோரஞ்சிதம் பூ
பல நிறங்களில்..நாங்கள் .....
கொஞ்சலோடு டிசம்பர் பூக்கள்
பனிரெண்டு வருடத்துக்கு
ஒருமுறை பூப்பவள் நான் ...
கோபத்தோடு குறிஞ்சு பூ
மேலும் மேலும் ........பலபூக்கள்
முடிவில்லை விடையில்லை...
தொடரும் போட்டிகள்
பூக்களுக்குள்ளும் ....
~ அன்புடன் யசோதா காந்த் ~
8/20/2011 12:16:00 PM
|
by யசோதா காந்த்
ஒவ்வொரு வயதிலும் பலவகை ஆசைகள்
சொந்தங்கள் மீது தீராத காதல்கள்
சேர்ந்திருக்கும் போது பூத்திடும் மகிழ்ச்சிகள்
பிரிவுகளில் தாங்கமுடியாத துயரங்கள்
காலங்கள் தரும் அனுபவங்கள்
நிரந்தரமாய் தாக்கும் சோகங்கள்
அருவியாய் கொட்டும் தத்துவங்கள்
மறந்த கடமைகள் ...
மறுத்த உண்மைகள் ..
கல்யாணம் எனும் பந்தங்கள்
அங்கேயும் அரங்கேறும் நாடகங்கள்
சொல்லும் கதைகள் சில
சொல்லாத கதைகள் பல
காட்சி முடிந்த பின்னும்
கலைய மறுக்கும் வேஷங்கள் ......
~ அன்புடன் யசோதா காந்த் ~
8/20/2011 09:46:00 AM
|
by யசோதா காந்த்
கடவுளுக்கோ குழப்பமாய்
தாய் தகப்பனுக்கோ
அவமான சின்னமாய்
உடன்பிறப்புகளுக்கோ கேலியாய்
உறவினர்களுக்கோ ...வேடிக்கையாய்
சமுதாயத்திற்கோ கேள்வியாய்
அரசாங்கத்துக்கோ தலைவலியாய்
எங்களுக்கோ வாழ்க்கை தவிப்பாய்
நாங்களும் மனிதர்கள் தானே
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்பர்
மன்னராய் வேண்டாம் மனிதராய் மதியுங்கள்
சீரியல் பார்த்து அழுவோர்களும்
இரங்க மனமில்லா எங்களிடம்
தாயே அணைக்க மறுத்த சேய்கள் நாங்கள்
வேறு யார் வந்துதான் நெஞ்சோரம் சாய்ப்பாரோ
தத்து எடுத்தோம் எங்களுக்குள் பல உறவுகளை
மனம் குமுறுகிறோம்
மனிதாபிமானம் என்றால் ??????????
~ அன்புடன் யசோதா காந்த் ~
8/20/2011 09:44:00 AM
|
by யசோதா காந்த்
புதுமை உலகை படைக்க
புயலாய் புறப்பட்டவள்
வாழ்க்கை படகை காக்க
வரம் வாங்கி வந்தவள்
மானிட பிறவிக்கு எல்லாம்
ஆதி உயிர் தந்தவள்
தாயாய் தாரமாய்
சகோதரியாய் நண்பியாய்
ஏற்ற பாத்திரங்களில்
கடமையாய் கருத்தாய் செய்பவள்
எங்கும் எதிலும்
கருவாய் அவளே பெண் .....
~ அன்புடன் யசோதா காந்த் ~
8/20/2011 09:41:00 AM
|
by யசோதா காந்த்
துள்ளி துள்ளி விழும்
வெள்ளி மலையருவியின்
செல்ல மகள் நான்
என் காதலன் கடல் நாயகனை
சேர காடு மலை கடந்து
நாடு புறங்களில் ஓடி
பாடி ஆடும்
பருவ மங்கை நான்
என் இரு புறமும்
செடி கொடிகளும்
பூக்கும் மரங்களும்
வழித்துணையாய் என்னோடு
கதைகள் பேசி
கருத்துகள் பரிமாறி
நடகின்றன ....
காதலனை காணப்போகும்
துடிப்பின் வேகம் குறைக்காது
எனக்குள்ளே ...
கொஞ்சிகுலவும் மீன்கள் கூட்டம்
ஓரமாய் எட்டிப்பார்க்கும்
மீன்கொத்தி கூட்டம்
என் சலசலப்பின் சத்தத்தில்
கவி பாடும் ...
பறவைகள் கூட்டம்
என் வழிகளில் ....
வண்ண பூக்களின் கூட்டம்
இந்த இயற்கையின் ...
அழகை படைத்த
இறைவனை வணங்கி கொண்டே
என்னவனை போய் சங்கமித்திடுவேன்
~ அன்புடன் யசோதா காந்த் ~
8/20/2011 09:38:00 AM
|
by யசோதா காந்த்
உயிரை பறித்து
உயிரை நெரித்து
உயிரை கொன்று
உயிரை தின்று
உயிரை முடித்து
உயிரை குடித்து
எனக்கே எமனான
என் உயிரே
உனை அமுதென்று பருகினேனே ..
விஷமாய் எனை கொல்கிறாயே ?.. .................
~ அன்புடன் யசோதா காந்த் ~
8/20/2011 09:35:00 AM
|
by யசோதா காந்த்
பிறக்கும் குழந்தைகள் எல்லாம்
தவமாய் பிறந்தவர்களா ??
தண்டனையாய் பிறந்தவர்களா ??
எங்களை பெற்றவர்களை
எங்கோ தொலைத்து விட்டோம் ..
அள்ளி அணைக்க அன்னை இல்லை ...
அறிவை சொல்ல தந்தை இல்லை ..
கொஞ்சி மகிழ
உடன்பிறப்புகள் இல்லை ..
சொந்தமென்று சொல்ல
உறவுகளும் இல்லை ..
எனினும்
எங்களுக்குள் சில நல்ல விஷயங்கள்
ஜாதி மத பேதம் எங்களுக்குள் இல்லை ..
ஏழை பணக்காரன் ஏற்றத்தாழ்வுகள் இல்லை
பொன்னுக்கும் மண்ணுக்கும் ஆசை இல்லை
புன்னகைக்கு குறைவில்லை என்றுமே எங்களுக்குள் ...
வாழ்க்கையை ஜெயிக்கும் போராட்டத்தோடு
அன்பெனும் ஆதரவை நாடும்
அனாதை விடுதியின்
ஆண்டவன் கைப்பிழைகள் நாங்கள்................
~ அன்புடன் யசோதா காந்த் ~
8/20/2011 09:32:00 AM
|
by யசோதா காந்த்
ஒரு இளவேனிற்காலத்தில்
இனியமாலை பொழுதில் ..
மெல்லிய இருட்டில்
தந்திரங்கள் பல கற்ற
மந்திரப் பெண்ணை கண்டேன் ..
கண்களிலே மாயம் காட்டி
நெஞ்சினிலே காயம் செய்தாள்
இவள் மானிட மங்கையோ ?
தேவலோக தேவதையோ ?
நடு நிஷி மோகினியோ ?
இனி ஒரு நாள் வருவாளோ ?
அவள் பெயர் தான் என்னவோ ?...
அந்த பின்னலிட்ட சின்ன கொடியாளை
காலமெல்லாம் காத்திருப்பேன் நான் காண்பதற்கு ...
காதலித்தே அவளை கைப்பிடிப்பதற்கு .................
~ அன்புடன் யசோதா காந்த் ~