உயிர் துளிகள் ...



உழைப்பில்
பயத்தில்
பிணியில்
துணையாய் வேர்வை துளிகள் அன்றோ !

பஞ்சத்தில்
விவசாயத்தில்
உயிர்வாழ்வில்
வரபிரசாதமாய் மழை துளிகள் அன்றோ !

துயரத்தில்
ஆனந்தத்தில்
பிரிவில்
ஆறுதலாய் கண்ணீர் துளிகள் அன்றோ !

ஜனனத்தில்
விபத்தில்
உயிர்கொடுக்க
ஆதரவாய் இரத்த துளிகள் அன்றோ!




~அன்புடன் யசோதா காந்த் ~

4 Responses
  1. நல்லா இருக்கு


  2. சிறு சிறு அழகான கவிதைகள். வாழ்த்துக்கள்.
    http://idimulhakkam.blogspot.com/


  3. நன்றி சசிகலா அவர்களே ...


  4. நன்றி இடிமுழக்கம் அவர்களே ...


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..