என்னில் நீ உலகமனாய்...











பத்திரிக்கை, கணனி, அரசியல், பொருளாதாரம்
வாழ்க்கையின் வரவு செலவும்
சின்ன, சின்ன கதைகள் பேசி
குழப்பத்தால் வரும் சில குறைகளையும் சொல்லி
கூடவே என் குடும்ப நலன் பேசி
அடுக்களை முதல் அலுவலகம் வரை
இன்றைய நாளின் முடிவையும்
நாளைய நாளின் தொடக்கமும்
பரிவோடு பரிமாறிக்கொள்கிறேன்
என் தோழா, உன்னால் நானும் என் செல்லிடபேசியும்
ஓட்டி பிறந்த இரட்டையராய் இணைந்து போனோம்
உறவுகளில் உயர்ந்தவனே என் தோழா
உறவுகளால் நிறைந்தவனே
உன்னால் நான் உருவமானேன்
என்னில் நீ உலகமனாய்...

~அன்புடன் யசோதா காந்த் ~

புதிய சமுதாயம் படைப்போம் என்று உறுதிமொழி எடுப்போம் ....










அன்னையர் தினம் ..நண்பர்களுக்குள்ளே வாழ்த்துக்கள் பரிமாறி ...தாயின் பெருமைகளை வாழ்த்திகொண்டும் ...கவிதைகள் பல புனைந்தும் .ஆனந்தமாக அனைவரும் இருந்த பொழுதோ ..நண்பர் ஒருவரின் ..கேள்வி ..மனதை கலங்க செய்தது ,,,பெண் என்பவள் ..அன்னையாகவும் ..சகோதிரியகவும் ..தோழியாகவும் ..காதலியாகவும் ..மகளாகவும் ,,,இன்னும் பல வித பாத்திரங்களில் தனது கடமையை செவ்வனே செய்கிறாள் ஆனால் மாமியார் எனும்  பாத்திரம் மட்டும் ...தன் கடைமைகளை சரிவர செய்யாமல் ...கேள்விக்குறியாகவே இருக்கிறதே என்று கூறினார் ....சிந்தியுங்கள் அன்பு தோழிகளே உண்மைதான் ...இன்று நாம் படும் அதே வேதனைகளைதானே ..நம் வருங்கால பெண்  இனம் அனுபவிக்கும்  ...இன்று நம் ஆண் குழந்தைகள் சிறியவர்கள் ..நாளை அவர்கள் வளர்ந்து பெரிதாகும் போது நம் மனங்களும்  மாறித்தான் போகுமோ ...வேண்டாம் அன்பின் தோழிகளே ...நாம் அன்னையாகவே இருப்போம் நம் வீட்டிற்கு வரும் மருமகளிடம் ...வரதட்சணை கேட்க்கமட்டோம் என்றும் ...நம் வீட்டிற்கு வரும் நம் மருமகள் புகுந்த வீடு என்று நினைக்காமல் அதையும் அவர்கள் பிறந்த வீடாய் கருதும் படி ...அன்பினால் அரவணைப்போம் ...என்றும்

இன்று உறுதி கொள்வோம் ...புதிய சமுதாயம் படைப்போம் ..அன்னையாகவே வாழ்வோம்

நன்றி வணக்கம்

~அன்புடன் யசோதா காந்த் ~

உயிரிலே கலந்து .....








என் உயிரே
எந்தன் அழகே
நம்மக்குள் உள்ள காதலை
வடித்தேன் ஓர் கவிதையாய் ...

இமையாக நீ இருக்க 
இமைக்காமல் ரசிக்கின்றேன் 
சுமையாக நான் இருந்தும் 
சுவையாக சுமக்கிறாயே ...


பதுமையாக நீ இருக்க 
புதுமையாக பார்க்கிறேன் 
பனிதுளியாய் நீ இருக்க 
பரவசமாய் ரசிக்கிறேன் 

துயிலாமல் நீ இருக்க 
துடிப்போடு அணைக்கிறேன் 
துணையாக நீ இருக்க 
தொலைதூரம் பறக்கின்றேன் ...
மழையாய் நீ இருக்க 
உனக்குள் குளிர் காய்கின்றேன் 
அனலாய் நீ அணைக்க 
உன்னில் குளிர்கின்றேன் ....

எந்தன் உறவே ...

~அன்புடன் யசோதா காந்த் ~

ஒற்றையடிப்பாதை ....




உன்னோடு நான் இருவழி பயணமாய் அதில் 
தனிமையில் தவிப்போடு நான் 
இன்பத்தில் கைகோர்த்து 
துன்பத்தில் விழி நீர் கோர்த்தும் 


ஒற்றையிலோ ...
மரங்கள் தலையாட்டும் சப்தமும் 
கூ கூ என கூவும் குயில் ஒன்றும் 
கீ கீ என கொஞ்சும் கிளி ஒன்றும் 
ஒற்றை பாதையிலும் ஓர் பாதையாய் 
நேர்கோட்டில் செல்லும் எறும்புகளும் 
என்னோடு துணையாய் ...


~அன்புடன் யசோதா காந்த் ~

நிலவாய் அவள் ...







அழகிய நிலவு என் வானில் நீ 
அன்பான கனவு என் இரவுகளில் நீ 
இன்பமான தொடக்கம் என் விடியலில் நீ 
என் பொழுதுகள் நகரும் பொன் நிமிடங்கள் நீ 
அனைத்து இன்பங்களின் ஆதாரம் நீ 
என் வீட்டின் வெளிச்சம் நீ 
என் நாடி நரம்புகளின் நாதம் நீ 
என் உயிரின் உயிரோட்டம் நீ 
எனதெல்லாம் நீயே நீயே !!!


~அன்புடன் யசோதா காந்த் ~

நட்பு ...







எல்லை இல்லா வனத்தில்
உயரே உயரே பறக்கிறேன்

கள்ளமில்லா சிரிப்பினை
கனவினிலும் கூட சிந்துகிறேன்

அன்பு எனும் அடைமொழியால்
அணையா விளக்காய் எரிகிறேன்

ஆண்  பெண் என்ற பாகுபாடின்றி
அன்பின் நட்புக்களினால் மிளிர்கிறேன்

இறைவன் அருளிய  நட்பு உறவுகளை
கற்பென காத்து போற்றிடுவேன்

~அன்புடன் யசோதா காந்த் ~

குரங்கு ...மனம் ...





மனம் ஒரு குரங்காய்
மரம் விட்டு மரம் தாவி
இருக்கும் இடம் நில்லாமல்
இல்லாதோர் ஒரு  இடம் தேடி
பறக்க நினைக்கும் பறவை போல்
இறகுகள் இன்றி உயர பறந்தே
முடியாத பாதைகளில்
முக்கி  முனங்கி நடைபோட
தெரிந்த விடைகளையும்
துருவி துருவி கேள்வி கேட்டும்
போதுமென்ற நிறைவு இன்றி
பொருளுக்கும் பணத்திற்கும் ஆசைப்பட்டு
நடக்காத ஒன்றை நடக்காதோ என்றெண்ணி
எட்டா கனி என்றறிந்தும்
நிம்மதி இழந்து தவிக்கும்
மனம் ஒரு குரங்கு அன்றோ ....


~அன்புடன் யசோதா காந்த்~ 

அறிவுரை ...



 
மூத்தோர் சொல்கேட்ப்போம்
முக்கனிகளாய் இனிப்போம்
முழுமையாய் பயனடைவோம்

ஆன்றோர்களின் அறிவுரைகளோ
அறிவில் சிறக்க செய்திடுமே
ஆக்கம் பலபல  உருவாகுமே !

அறியா  வினாக்களுக்கெல்லாம்
பெரியோர்களன்றோ அகராதியாம்

இயற்கை வைத்தியங்களும்
இயற்கை  சீற்றங்களையும்
வியக்கும் வண்ணம் எடுத்துரைப்பாரன்றோ  !

வாழ்கையின் ரகசியங்களையும்
வகை அறிந்து உணர்த்திடுவாரன்றோ !
முதியோர் இல்லங்கள் ஒழியட்டும் 
அவர் நம் அன்பு பிணைப்பில் வாழட்டும்

முதியோர்களை போற்றுவோம்
முரண்பாடுகள் இன்றி வாழ்ந்திடுவோம்

~அன்புடன் யசோதா காந்த் ~

நாணம்..


  











சுமைகளை தாங்கி தாங்கியே
பழகிப்போனது மனது 
காலங்கள் பல கடந்தும் 
நிமிர மறு(மறந்)த்தது முதுகு
நிலம் பார்த்து நடக்கின்றேன் 
இன்றும் நாணத்தைவிடாமல் ...


~அன்புடன் யசோதா காந்த் ~





முத்து மாமா ...,,,














முந்திரி தோப்பில்
முந்தானைய இழுத்த
என் முத்து மாமா
உன் முத்து சிரிப்பில்
முற்றும் தொலைத்தேன்
என் செல்ல மாமா

உன் அக்கா மகள்
என் அன்பு உனக்குத்தான்
முத்து மாமா
நீ கள்ள தனமாய்
கண்டு ரசிப்பது ஏன்
என் தங்க மாமா

கோயில் குளம்
 வேண்டி நிக்கிறேன்
என் முத்து மாமா
நீ வேண்டாதனம் 
செய்ய துடிப்பதேன்
என் கண்ணு மாமா

ஜாதி சனம் முன்
உன் தாலிக்காய் தலை குனிவேன்
என் முத்துமாமா
நீ தன்னந்தனியாய்
நின்னு தவிப்பதேன்
என் சின்ன மாமா

வைகாசி மாசம்
பந்தல் போடணும்
என் முத்து மாமா
நீ வேலி அடைத்து
வெள்ளாமை  தொடங்கு
என் ஆசை மாமா

ஆடி மாசம்
அம்மா கூப்பிடுவா
என் முத்து மாமா
நீ அங்கே இங்கே நின்னு முழிப்ப
என் அழகு மாமா

நம்ம பேரு விளங்க
பிள்ளைகள் வளரும்
என் முத்து மாமா
நம்ம காலம் முழுவதும்
இன்ப கதை சொல்லுவோம்
என் வீர மாமா

~அன்புடன் யசோதா காந்த் ~

இறைவா தூக்கம் கொடு .....












இறைவா தூக்கம் கொடு ..

பணமே சிந்தனையாகி 
                தூக்கமின்மை

ஆரோக்கியம் நலன் கருதி
                தூக்கமின்மை

உறவுகளின் பிரிவுகளால்
                  தூக்கமின்மை

மனம் நிறைந்த மகிழ்ச்சியால்
                 தூக்கமின்மை

காதலின் சுகங்களை அசைபோட்டு
                   தூக்கமின்மை

குழந்தைகளின் எதிர்காலம் கருதி
                     தூக்கமின்மை


கடன் தொல்லை தாங்காதே
                    தூக்கமின்மை
அடுத்தவர்  உயற்சி கண்டு பொறாமையால்
                   தூக்கமின்மை 

வயதாகி போனாலோ மரணம் நினைத்து
                       தூக்கமின்மை

தூங்காத விழிகள் ஆயிரமோ ???????????
இரவுகள் ஆயிரமோ .?????????????????.


~ அன்புடன் யசோதா காந்த் ~

பள்ளிக்கூடம் ....





இவளும் நம் தாயல்லவா
தாயவள் கருவறையில்
நமக்கு உருவம் கொடுபாள்

பள்ளிக்கூட   வகுப்பறையோ
நம் வாழ்வுக்கு வழி திறப்பாள்

குயவனின் கைபட்ட களிமண்ணோ
சிறப்புமிக்க  பொருளாகும்

பள்ளிகூடமோ நம்மை
மாண்புமிகு மனிதர்களாக்கும்

மனிதனை   மனிதனாக்குவதும்
பள்ளிக்கூடமே

பட்டங்களும் பதவிகளும் தந்து
சரித்திரம்  படைக்க வைக்குமே

அறிவு எனும் கண்ணைதிறந்து
கல்விதரும் பள்ளிக்கூடமும்
நமது கருவறையே ..

~அன்புடன் யசோதா காந்த் ~


பொக்கிஷம் ...

..







எழுதுவதும் வாசிப்பதும்
கிழித்து எறிவதும் தொடர்கதையாய்
மனதின் தேடல் கிடைப்பதுவரை
காகித துண்டுகள் மலைபோல் குவியலாய்

மனைவிக்கு கோபம்
வீட்டை சுத்தம் செய்தே
ஓய்ந்து விடவே

குழந்தைகளும் எச்சரித்தன எனை
குப்பைபோடாதீர்கள் என

என் ஊனமுற்ற கவிதைகள்
அவர்களுக்கோ வெறும் குப்பையாய்

இனி நானோ ..
ஆரோக்கியமான கவிதைகள் வரும் வரை

சேமிக்க தொடங்கினேன்
குறையாய் பிறந்த என் கவிதை குழந்தைகளை
குப்பையாக்காமல் பொக்கிஷங்களாய்..

~அன்புடன் யசோதா காந்த் ~

வலி .....









நாட்களும் நொடிகளும்
 நகர மறுப்பதேன் ?

உண்ணாமல் ...நீர் அருந்தாமல் இருந்தும்
பசிப்பதில்லையே  ஏன் ?

உறவெல்லாம் உடன் இருந்தும்
தனிமை என்னை தழுவியதேன்?

இதய துடிப்பு சீராய் இருந்தும்
உடலும் மனமும் உயிரற்று இருப்பதேன்?

வாழ்க்கையில் மற்ற ஒன்றிலும்
தேடல் இல்லையே ஏன்?

கத்தியின்றி காயம்இன்றி
வலிகள் ஏன்?

காதலெனும் நோயினால்
உடலும் மனமும் உருக்குலைந்து போவதேன் ?

பெரும் பிணிக்கெல்லாம் தீர்வு உண்டே
காதல் நோய்க்கு மருந்து இல்லையே  ஏன் ?

ஏன் ஏன் ஏன் என்று
மனம் மருகி உருகி தவிப்பதேன் ?

~அன்புடன் யசோதா காந்த் ~

காதலர் தினம் ....









பூக்களும் காதல் பரிசுகளும்
குவிந்து கிடக்க

வாழ்த்துவோரும் வழங்குவோரும்
குழுமி இருக்க

நாகரீக காதலரோ
ஆடி பாட

கிராமத்து காதலரோ
திரை அரங்கு கோயில்குளம் தேட


புதிதாய் பூத்த காதலரோ
தவி தவிக்க

காதலில் வெற்றி கண்டவரோ
பெருமை கதை பேச

காதல் தோல்வி கொண்டவரோ
பார்க்கும் ஜோடிகளை வசை பாட

இனிதே தொடரட்டும்
இனிய காதலர் தினங்கள்

இன்புற வாழட்டும்
உண்மை காதலர்கள்

~அன்புடன் யசோதா காந்த் ~

அன்னை போல நீயும் .....







அன்பே என் தாயின் அணைப்பை
உன்னில் உணர்ந்தேனே
தாய் அவள் தவிப்பை
உன்னில் அறிந்தேனே

அன்னை அவள் பரிவை
உன்னில் கண்டேனே
அன்பான  அவள் கொஞ்சல்களை
உன்னிடம் அனுபவித்தேனே

அன்னை அவள் பொய் கோபம்
உன்னிடமும் அப்படியே
பாசமிகுதியால் சின்னசின்ன சண்டை
நம்மிலும் நடக்கிறதே

என் அன்பு காதலா
நீயும் என் தாயின் சாயலே
உன் மடிமீது தலைவைத்து
நானும் சிறு குழந்தை போலானேனே

`அன்புடன் யசோதா காந்த் ~

அன்புள்ள அம்மாவுக்கு ....









அம்மா உன்னை பார்க்க ஆசை
காதலின் வேகத்தில்
உன்னை மறந்தேனே
நானே தாயானபோதோ 
தவறுகளை உணர்ந்தேனே

என்னை விழிக்குள் 
வைத்தல்லவா நீ வளர்த்தாய்
எனக்கு பிடித்த உணவுகளையல்லவா
பார்த்து பார்த்து சமைத்தாய்

ஒரு நிமிடம் உன்னை மறந்து
என்னவர் பின் நடந்தேனே
உன்னை பிரிந்த பின்னும் 
ஒவ்வொரு நொடியும்
என் நினைவே நீயானாயே

உந்தன் வலியை எந்தன்
மகபேறு தன்னில் உணர்ந்தேனே
மன்னிப்பாயா என்னை மன்னிப்பாயா
நீ வேண்டும் அம்மா மீண்டும் எனக்கு
நான் குழந்தையாய் மாறி
உன் புடவை தலைப்பால் 
முகம் மறைத்து விளையாட

நீ தலை தடவ உன் மடிமீதுறங்க
உன் கன்னம் உரசி முத்தமிட
என் இன்ப காலம் இனியும் வேண்டும்
அழைக்கிறேன் என் அன்பு அன்னையே ..

~அன்புடன் யசோதா காந்த் ~

சொல்மனமே சொல் ...








சொல்மனமே சொல்
நடப்பவை  யாவும் நன்மைக்கே  என்று

அச்சம் என்று எதுவும் இல்லை
தோல்விகள் கண்டு துவளுவதும் இல்லை
துயரங்களில் தோய்ந்து போவதும் இல்லை
எதிர் காலம் கருதி கலங்குவதும் இல்லை
மரணம் விரைவில் வரும் என தெரிந்தாலும்
எக்காலத்திலும் எந்த நேரத்திலும்

சரியோ ..
தவறோ
எதுவாயினும்
சொல் மனமே சொல்
நடப்பவை யாவும் நன்மைக்கே  என்று 

~`அன்புடன் யசோதா காந்த் ~

சாதி ....











ஆதியில் சாதி இருந்ததோ ?
மேல் மக்கள்  கீழ் மக்கள் உண்டோ ?
ஆண் பெண் இருபாலர்  அல்லவா?

அன்பென்ற தாய் பெற்ற பிள்ளைகள்
அனைத்தும் ஓர் குலம் அன்றோ ?

இறந்த உடல்கள் அனைத்தும்
பிணம்எனும் ஒற்றை பெயர்தானே ?

அறுத்தெறிவோம் ஜாதி எனும் ஆணி வேரை

பாரதி கண்ட கனவு
பாரதத்தில்  பலிகட்டுமே

உறுதி எடுப்போம் தீண்டாமை
இனி இல்லை என்று ..

அறிவில்லாதோர் காட்டும் இரட்டை குவளை
முறை அழிப்போம்

சாதி என்ற பெயரில்  அடிமைத்தனம்
ஆள்வோரை ஒழிப்போம்

வாழ்க பாரத அன்னை
வளர்க நம் பாரதம் ..


~அன்புடன் யசோதா காந்த் ~

கனவுகளே .....





இரவுகள் தோறும் எண்ணிலா   கனவுகள் ...


புரியாத இன்பம் தரும் கனவுகள்
அறியாத துக்கம் தரும் கனவுகள்

மோகினி பேய்களுடன் கைகோர்க்கும் திகில் கனவுகள்
பகைமை உணர்த்தும் பழிக்குப் பழி கனவுகள்

காதலை அள்ளி தெளிக்கும் காதலான கனவுகள்
உணர்வுகளை தூண்டும்  காம கனவுகள்

பொன்னும் பொருளும் கண்டு மயங்கும் ஆசை கனவுகள்
பாம்பும் தேளும் ஊரும்  கோர கனவுகள்

பிரிந்த சொந்தங்கள் சேரும் பாச கனவுகள்
ஏதேதோ முகமுடி இட்ட வேசகனவுகள்

குழந்தையாய் மனம் மகிழும் அற்புதகனவுகள்
உயிர் போகும் வலியுள்ள மரணகனவுகள்

விடிந்ததும் ...

மாறாமல் மனதில் நிலைத்திருக்கும் சில கனவுகள்
நினைத்து பார்த்தும் நினைவில் வராத பல கனவுகள்

~அன்புடன் யசோதா காந்த் ~